Sunday, June 22, 2014

First Centum - Fourth Decad

|| Om Namo Narayanaya ||



 In this decad, Sri Nammalwar gets into the personality of a woman who pines for the Lord. He takes on the roles of  Lord's lover, mother and friend. Sri Nammalwar is identified by the name "Paraankusa Nayagi". His deep affection for the Lord and forgetting himself completely and the powerful presence of the Lord made him feel like a woman and the songs reflect very well the state he was in.

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா வென்றெனக்கருளி
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் வீடு தூது சென்றக்கால்
வன் சிறையிலவன் வைக்கில் வைப்புண்டாலென் செய்யுமோ.

Ye young, sympathetic Stork, with pretty plumes, taking pity on poor me, go with your male partner and deliver my message to the Lord on whose banner Is (Garuda) that bird with formidable plumes; If perchance He puts you in prison tough, what does it matter if you were to suffer on my behalf?


அம் சிறைய --அழகிய சிறகுகளுடைய 
மடம் --இளமை  தங்கிய 
நாராய் --நாரைப்  பறவையே 
அளியத்தாய் --தயை  பண்ணுதற்கு உரியாய் 
நீயும் --நீயும் 
நின் --உன்னுடைய 
அம்  சிறைய சேவலுமாய் --அழகிய சிறகுகளையுடைய ஆணுமாய் 
ஆ ஆ  என்று  எனக்கருளி --ஐயோவென்று என் விஷயத்தில் அருள் கூர்ந்து 
வெம் சிறை புள்ளுயர்த்தார்க்கு --விரோதி பயங்கரமான சிறகுகளையுடைய  கருடனை கொடியில் சின்னமாகக் கொண்டுள்ள எம்பெருமானுக்கு 
என் விடு தூது ஆய் --என்னால் விடப்பட்ட தூதாய் 
சென்றக்கால் --போனால் 
அவன் --அந்த எம்பெருமான் 
வன் சிறையில் வைக்கில் --கடினமான சிறையில் வைத்திட்டால் 
வைப்புண்டால் --அதை நீ அனுபவித்திருப்பாயானால் 
என் செய்யும் --என்ன கெடுதல் உண்டாகும் ?


=====****=====

என் செய்ய தாமரைக்கண்  பெருமானார்க்கென் தூதாய் 
என்செய்யுமுரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே 
முன்செய்தமுழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் 
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே.


Preamble
The love-intoxicated Alwar beckoned the stork pair, in the preceding stanza, to carry a message to the Lord but the contents.of the message are now revealed by him to a band of Koels. This kind of confusion only reveals the intensity of the Alvar's God-love,the ecstatic imbalance of mind.

Translation
Oh, you happy band of  Koels, what will unto you  happen if you conveyed my message to my lotus-eyed Lord? Well, aren't you the familiar lot? should it be decreed that I, who, from His service, did all these days abstain because of my past sins, be still kept away from His feet?


இனம் குயில்காள் --கூட்டமான குயில்களே!
என் --என்னுடைய 
செய்ய தாமரைக் கண் --செந்தாமரை மலர்களைப் போன்ற திருக் கண்களையுடைய 
பெருமானார்க்கு --எம்பெருமானுக்கு 
என் தூது ஆய் --
நான் விட்ட தூதாகி 
உரைத்தக்கால் 
--சென்று விஷயத்தை அறிவித்தால் 
என் செய்யும் --(அந்த செயல் உங்களுக்கு) என்ன தீமையை விளைவிக்கும் ?
நீர் அலிரே --(நெடு நாளாகப் பழகிப் போந்த ) நீங்கள் அல்லீர்களோ ?
முன் செய்த --முற் பிறப்பில் செய்த 
முழு வினையால் --பெரும் பாவத்தினால் 
திரு அடி கீழ் --திருவடிகளிலே 
குற்றேவல் செய்ய --கைங்கர்யம் பண்ணுவதற்கு 
முன் முயலாதேன் ?--முன்னம் முயற்சி செய்யாத நான் 
இனம் --இன்னமும் 
அகல்வதுவோ விதி --விலகி இருப்பதுவா  முறை? 


                                                                   =====****=====

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய வன்னங்காள் 
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு 
மதியிலேன் வல்வினையே மாளாதோவென்று     ஒருத்தி 
மதியெலாமுள்  கலங்கி மயங்குமாலென்னீரே. 

You lucky pair of Swans, with gentle gait, go and tell Him who, as the midget  (Vamanaa), covertly got a donation of the worlds,  that here lies one , whose sins are inexhaustible, is in a terrible state of mental imbalance.

விதியினால் --பாக்ய வசத்தினால் 
பெடை மணக்கும் --பேடையோடு கூடிக் களித்திருக்கும் 
 மெல் நடைய --மெல்லிய நடையை உடைய 
அன்னங்காள் --அன்னப் பறவைகளே 
மதியினால் --புத்தியினால் 
குறள் மாணாய் --வாமா  ப்ரமசாரியாய் 
உலகு இரந்த --உலகங்களை யாசித்த 
கள்வர்க்கு --கபடமுடைய  பெருமானுக்கு 
மதியிலேன் --புத்தியில்லாத என்னுடைய 
வல் வினையே மாளாது --பெரிய பாவந்தானோ முடியாதிருப்பது 
என்று --என்று சொல்லி 
ஒருத்தி --ஒரு பெண்ணானவள் 
மதி எல்லாம் உள் கலங்கி --புத்தியானது முழுவதும் கலங்கப் பெற்று 
மயங்கும் --அறிவழிந்து கிடக்கின்றாள் 
ஆல்  என்னீர் --அந்தோ!  என்று  உரைப்பீர் 


                                             ====*****====

என் நீர்மை கண்டிரங்கி இது தகாதென்னாத 
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லியான் சொல்லுகேனோ 
நன்னீர்மை இனியவர்கண் தங்காதென்றொருவாய்ச்சொல் 
நன்நீலமகன்றில்காள்  நல்குதீரோ நல்கீரோ.

Nammalwar as Parankusa Nayagi was expressing her state to the Cakravaka birds Anril in tamil , from the duck family). Some of the birds offered her help. She being in a dejected state of mind, due to the aloofness of her beloved (the Lord) was not hopeful that her message sent via the birds will have any impact on the Lord. And yet, she asked the blue birds to apprise the Lord of her precarious condition, with little or no chance of survival.


என் நீர்மை கண்டு --எனது ஸ்வபாவத்தை பார்த்திருந்தும் 
இரங்கி --மனமிரங்கி 
இது தகாது என்னாத --இப்படி நாம் பிரிந்திருப்பது சரியல்ல என்றிராமல் 
என் நீல முகில் வண்ணர்க்கு --நீல மேகம் போன்ற நிறமுடைய எம்பெருமானுக்கு 
என் சொல்லி யான் சொல்லுகேனோ --என்ன சொல்லப் போகிறேனோ  
இனி அவர்கண் --இனி (பராங்குச நாயகியான ) அவளிடத்தில் 
நல்  நீர்மை --நல்லுயிர் 
தங்காது --தங்கியிருக்க மாட்டாது 
என்று ஒரு வாய் சொல் --என்றொரு வாய்ச்  சொல்லை 
நல் நீலம் மகன்றீர் காள் --நல்ல நீல  நிறத்தை உடைய மகன்றில் பறவைகளே 
நல்குதீரோ நல்கீரோ --எம் பெருமானிடத்தில்  சொல்லுவீர்களோ மாட்டீர்களோ ?


                                                      ====****====

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே
நல்கத்தா னாகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப்  புனற்படப்பை யிரைதேர்வண் சிறுகுருகே
மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங்கொண்  டருளாயே.

Ye little lovely heron, seeking food in water logged flower gardens,  when you behold Naranan, the sole sustainer of the seven worlds, will you tell Him that here is one with tearful eyes, a sinner He can't throw down, and bring back any reply he chooses to send ?


நல்கித்தான்--தான் விரும்பி 
காத்தளிக்கும்--அனைத்து  ஜீவராசிகள் உள்ளிருந்து  காக்கும் 
பொழிலேழும்--அழகிய  ஏழு உலகங்களையும் 
வினையேற்கே--தான் விரும்பியவனாக , அந்த உலகங்களுக்கு விருப்பமற்றவற்றை தானே நீக்கியவனாக 
நல்கத்தான் ஆகாதோ --எனக்கு திருவருள் புரிந்தால் ஆகாதோ ? என்று 
நாரணனை --எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை 
கண்டக்கால் --காண நேர்ந்தால் 
மல்கு நீர் புனற் படப்பை --மிகுதியான தண்ணீரை உடைய தோட்டங்களில் 
இரை தேர் வண் சிறு குருகே--இரையாக உள்ள சி று மீன்களைத்  தேடுகின்ற குருகே (நீர்ப் பறவை)
மல்கு நீர் கண்ணேற்கோர்--மிகுதியான கண்ணீரால் நிரம்பிய கண்களைக் கொண்ட 
வாசகங் கொண்டருளாயே --என்னிடம் கூற வேண்டும் 

                                                      ====****====

அருளாத நீரருளி யவராவி துவராமுன் 
அருளாழிப் புட்கடவீ ரவர்வீதி யொருநாளென்று 
அருளாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி 
அருளாழி வரிவண்டே யாமுமென் பிழைத்தோமே.


You lovely bee! if you meet my gracious Lord,Pray tell Him, although He didn't relent thus far, He should shed  His grace on me before  my  ife departs, And just pass some day through this street, Mounting the gracious bird (Garu{a); I shall then steal a glance at Him. Oh!what is my fault ?


ஆழி  வரி வண்டே --வட்டமான ரேகைகளை உடைய வண்டே 
அருள் ஆழி அம்மானை --அருள் சுடரான எம்பெருமானை 
கண்டக்கால் --அவரைக் கண்டபொழுதில் 
அருளாத நீர் --கிருபை பண்ணாத நீர் 
அருளி --அருள் செய்து 
அவர் ஆவி துவாரமுன் --அவருடைய (ஆழ்வாருடைய )  உயிர் நீர்மை கெடுவதற்கு முன்னமே 
அருள் ஆழி --கருணைக் கடலான பெரிய திருவடியை 
அவர் வீதி --அவர் இருக்கிற வீதியில் 
ஒரு நாள் --ஒரு நாளாயினும் 
கடவீர் என்று --கடத்துவீராக  என்று 
இது சொல்லி --இந்த வார்த்தையைச் சொல்லி 
அருள் --கிருபை பண்ண வேணும் 
யாமும் --நாமும் 
என் பிழைத்தோம் ?--என்ன குற்றம் செய்தோம் 

                                                         ====****====

என்பிழை கோப்பதுபோலப் பனிவாடையீர்கின்ற
என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கென்றொரு வாய்சொல்
என்பிழைக்குமிளங்கிளியே யான்வளர்த்த நீயலையே.


Here am I, tormented by the spine-chilling blast.  Ye young parrot, ain't you the one I reared ?   What'll go wrong with you, if you went and enquired of ' Tirumal ', who looks solely on rny faults and sheds  not His grace on me. What is precisely my fault that admits not His clemency.

என்பு --எலும்பிலே 
இழை--நூல் இழையை 
கோப்பது போல --நுழைப்பதைப்  போல் 
பனி  வாடை --குளிர்ச்சி பொருந்திய  வாடைக் காற்று 
ஈர்கின்ற --வருத்துகின்றது 
என் --(இப்படி  வருந்துகின்ற ) என்னுடைய 
பிழையே --குற்றங்களையே 
நினைந்தருளி --எண்ணி 
அருளாத --கிருபை  பண்ணாதிருக்கிற 
திரு மாலார்க்கு --லக்ஷ்மி நாதனுக்கு (லக்ஷ்மி நாதனிடம் சென்று )
திருவடியின் --ஸ்வாமியான தேவரீருடைய 
தகவினுக்கு --கிருபைக்கு 
என் பிழைத்தான் என்று --(பராங்குச நாயகி ) என்ன  பிழை  செய்து விட்டாள் என்று 
ஒரு வாய் --ஒரு வார்த்தை 
சொல் --சொல்ல வேணும் .

===***===

நீயலையே சிறுபூவாய் நெடு மாலார்க்கென் தூதாய் 
நோயெனது  நுவலென்ன. நுவலாதே யிருந்தொழிந்தாய் 
சாயலொடு மணிமாமை  தளர்ந்தேன் நான் இனியுனது 
வாயலகில் இன்னடிசில்  வைப்பாரை நாடாயே.


நாடாத மலர்நாடி  நாள்தோறும்  நாரணன்தன்.
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று.
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ ?
ஊடாடி பனி வாடாய். உரைத்தீராய் எனதுடலே.

உடலாடிப் பிறப்பு வீடுயிர் முதலா முற்றுமாய்.
கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கா  லிதுசொல்லி
விடலாழி மட நெஞ்சே. வினையோமொன்  றாமளவே.

அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியந்த அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.



No comments:

Post a Comment